திருச்செந்தூர் அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட டேக்வண்டா போட்டி - வெற்றியை ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டதாக போட்டியாளர்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

திருச்செந்தூர் அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட டேக்வண்டா போட்டி - வெற்றியை ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டதாக போட்டியாளர்கள் குற்றச்சாட்டு.

திருச்செந்தூர் அருகே அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வண்டா போட்டியில் முறையாக பயிற்சி பெற்றவர்களை நடுவர்களாக அமர்த்தாமல் பள்ளி மாணவிகளை நடுவர்களாக அமைத்து வெற்றியை ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டதாக போட்டியாளர்கள் குற்றச்சாட்டு.
 
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தில் மாவட்ட அளவிலான டேக் வெண்டா போட்டிகள் நடைபெற்றது. 

இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 9 குறு வட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட இணை போட்டிகளில் வெற்றி பெற்ற 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பங்கேற்றனர். 

இந்தப் போட்டி நடைபெறும் போது முறையாக நடுவர்களை பணியமர்த்தாமல் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோரை நடுவராக வைத்தும், பயிற்சி பெறாத மாவட்ட அளவிலான உடற்கல்வி ஆசிரியர்களையும் நடுவராக பணியமர்த்தி ஒருதலை பட்சமாக வெற்றி நிர்ணயிக்கப்பட்ட தாக குற்றம்சாட்டி போட்டியில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.

எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி மீண்டும் அதே போட்டிகளை, திரும்ப நடத்த வேண்டுமென போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் தேக்வாண்டா பயிற்சியாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad