ஊத்தங்கரையில் கோலாகலமாக நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா – மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஆகஸ்ட், 2026

ஊத்தங்கரையில் கோலாகலமாக நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா – மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.


ஊத்தங்கரை, ஆக.15:
 


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை–கல்லாவி சாலையில் முருகர் கோவில் அருகே அமைந்துள்ள அகில இந்திய மக்கள் நலக் கழக அலுவலகத்தில், 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் திரு. சிவக்குமார், மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் திரு. சதீஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும், மாவட்ட தலைவர் திரு. கோபால் ரெட்டி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபரும், விவசாய சங்கத் தலைவருமான திரு. உமாபதி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அனைவரும் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், அகில இந்திய மக்கள் நலக் கழக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளும் (ID Cards) வழங்கப்பட்டன.


விழாவில் கழகத்தின் மாவட்ட IT Wing தலைவி திருமதி. வித்யா, IT Wing துணைத்தலைவி திருமதி. பத்மப்ரியா, IT Wing செயலாளர் திரு. மாதவன், மாவட்ட IT Wing துணைச் செயலாளர் திரு. பிரேம்குமார், மாவட்ட செயலாளர் திரு. எல். சதீஷ், மாவட்ட வணிகத்துறை தலைவர் திரு. கணேஷ்குமார், மாவட்ட வணிகத்துறை துணைத்தலைவர் திரு. சிரஞ்சீவி, மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. அருண்குமார், மாவட்ட வணிகத்துறை செயலாளர் திரு. ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும், கழக உறுப்பினர்களான திருமதி. ராஜேஸ்வரி, திருமதி. மகாலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தேசப்பற்று, சமூகநலம் மற்றும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இவ்விழா, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றதுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad