வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த கொசவன்புதூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது !
குடியாத்தம் , செப்டம்பர் 2 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
தலைவர் சந்திரபாபு (வயது 52). இவரின் மனைவி தற்போது ஊராட்சி மன்ற தலை வராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரதம் இருந்த தாக கூறப்ப படுகிறது இதனுடைய நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட நபர்களு க்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் ஊராட்சி மன்ற தலைவர் அலு வலகத்திற்கு சென்றுள்ளனர். பேச்சுவார் த்தை முடிந்த பின்பு வெளியே சென்ற சம்பந்தப்பட்ட நபர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை ஊராட்சி மன்ற அலுவ லக வாயிலில் சந்திரபாபு வீசியுள்ளார். மேலும் அந்த நாற்காலிகளை தீயிட்டுக் கொளுத்தி தாழ்த்தப்பட்ட நபர்கள் அமர்ந் திருந்ததால் தீயிட்டு கொளுத்துவதாக அவர் கூறியபடி நேற்று விடியோ ஒன்றை வெளீயிட்டுள்ளார். அந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது
வீடியோ ஆதாரங்களை வைத்து சந்திர பாபுவை இன்று காலை கே வி குப்பம் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக் கை நடவடிக்கையாக அந்த பகுதி விஏஓ ரமேஷ்குமார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஊரா ட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரியின் கணவருமான சந்திரபாபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். இது தொடர்பாக குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சாரணை நடத்தி வருகின்றார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக