டாஸ்­மாக் சங்­கங்­களின் கூட்டமைப்பு சார்பில் மதுக்கடை விற்பனையாளர் கள் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

டாஸ்­மாக் சங்­கங்­களின் கூட்டமைப்பு சார்பில் மதுக்கடை விற்பனையாளர் கள் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் !

டாஸ்­மாக் சங்­கங்­களின் கூட்டமைப்பு 
சார்பில் மதுக்கடை விற்பனையாளர்கள்
டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் 
முற்றுகை போராட்டம் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 5 -
ராணிப்­பேட்டை மாவட்டத்தில் டாஸ்­மாக் கடை­களில் காலி பாட்டில்­களை திரும்­பப்­பெ­றும் திட்­டத்தை கைவிட வலி­யுறுத்தி விற்­ப­னை­யா­ளர்கள் 120-க்கும் மேற்­பட்­டோர், ஒருங்கிணைந்த டாஸ்­மாக் தொடர் சங்­கங்­களின் கூட்டமைப்பு சார்பில் டாஸ்­மாக் மேலா­ளர் அலுவலகத்தை முற்று­கை யிட்டு போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­த­தால்
பர­பரப்பு ஏற்­பட்டுள்­ளது. ராணிப்­பேட்டை 
மாவட்­டம் முழுவதும் மொத்­தமாக 76 மதுக் ­க­டை­கள் செயல்­பட்டு வருகின்­றன. இந்­தக் கடை­களில் விற்­பனை செய்­யப்­ப­டும் மது பாட்டில்­கள் காலியான பின் மீண்டும் திரும்ப பெறப்­ப­டுகின்­றன. இந்த நடை­மு­றையை கைவிட வேண்டும் எனக் கூறி டாஸ்­மாக் ஊழியர்­கள் ராணிப்பேட்டை டாஸ்­மாக் மேலா­ளர் அலுவல­கத்தை முற்று­கை­யிட்டு  போராட்­டம் நடத்­தினர். அதே போல, காலி பாட்­டிலை திரும்பபெற வேண்­டும் பை பேக் முறையை திரும்ப பெறவிட்­டால் மாவட்­டம் முழுவதும் உள்ள 76 மதுகடை­களை மூடிதொடர் போராட்­டம் 
நடத்­து­வோம் என டாஸ்­மாக் ஊழியர்­கள் தெரி­வித்துள்ளனர். மேலும் MRP எம். ஆர். பி விலை­யில் மதுவை விற்­பனை செய்ய வேண்டும் என்­றால், கூடு­தல் செலவி னங்­களை டாஸ்­மாக் நிர்­வா­கம் ஏற்க வேண்டும் என அவர்­கள் கோரிக்கை விடு த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad