திருநெல்வேலி ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு. திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மற்றும் திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இரண்டும் நாளை முழுமையாக ரத்து.
தாம்பரம் - நாகர்கோவில் செல்லும் அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் இன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும், நாகர்கோவில் - தாம்பரம் அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் நாளை நாகர்கோவிலுக்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.
பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் நாளை கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்; மறுமார்க்கமாக இந்த ரயில் நாளை திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியிலே இருந்து புறப்படும்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை மாலை 4.15 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும். இந்த தகவலை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக