தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.



தூத்துக்குடி, மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான 'விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்"  24.08.2023 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  'முத்து  அரங்கத்தில்" வைத்து  நடைபெற உள்ளது.  


எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

#End 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad