விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 3 பேருக்கு போக்சோ. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 3 பேருக்கு போக்சோ.

விழுப்புரம் மாவட்டம் கப்பியாம்புலியூர் கிராமத்தைச்  சேர்ந்த 17 வயது சிறுமியுடன் போட்டோ எடுத்ததை தட்டி கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல் விட்டதால் 3 பேர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சார்ந்த பிரகாஷ் (24), வினோபா (23),  செல்லதுரை (24) மூன்று பேர்  நண்பர்கள் இதில் சிறுமியுடன் செல்லத்துரை இருக்கும் போட்டோவினை சிறுமியின் சகோதரிக்கு வினோபா அனுப்பியுள்ளார்.

 

இதனை அறிந்த சிறுமியின் தாய் தட்டி கேட்டதால் இதனால் கோபமடைந்த 3 பேரும்  சிறுமியின் தாயை திட்டி மற்றும் கொலை மிரட்டல் விட்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார்  பிரகாஷ் மற்றும் வினோபாவை கைது செய்தனர் மற்றும் செல்லத்துறையை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad