நாட்றம்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

நாட்றம்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.



இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நாட்றம்பள்ளி பேரூர் செயலாளர் எஸ்.உமாசந்திரன்,
நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad