சிவகங்கையில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

சிவகங்கையில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25.08.2023 முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளன - மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தகவல்.


சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தம் 3359 காலிப்பணியிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே, இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 25.08.2023- முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 01.00 மணி வரை இவ்வலுவலகத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரக மயில் கேட் அருகிலுள்ள படிப்பு வட்டத்தில் நடைபெறவுள்ளது.


இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு குறைந்தபட்சம் 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு-28 அரசு விதிமுறைகளின் படி வயது வரம்புதளர்வுகளும் உண்டு இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் நாள்18.08.2023 முதல்  17.09.2023 வரை ஆகும். எனவே, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் மேற்காணும் தேர்விற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


மேலும், மேற்காணும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575- 240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது .


மத்திய மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித்தேர்வகளுக்கான பாடக்குறிப்புகள் வினாவிடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/