விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இன்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசியில், கடந்த சில நாட்களாக கோடை காலம் போல கடுமையான வெயில் இருந்து வந்தது. கடும் வெயில் காரணமாக இரவு நேரங்களிலும் கடும் வெட்கையாக இருந்தது. கடந்த 2 நாட்களாக காலை நேரத்தில் கடுமையான வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் மேகங்கள் திரண்டு வந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஆனால், மழை பெய்யாமல் லேசான தூறல் மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்தது. மாலை 4 மணியளவில் மேகங்கள் திரண்டு வந்து லேசான சாரல் மழை பெய்யத்துவங்கியது. சற்று நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகள், சசிநகர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், திருத்தங்கல், அம்மன் நகர், நாரணாபுரம், செங்கமலநாச்சியார்புரம், செங்கமலப்பட்டி, மாரனேரி, விளாம்பட்டி, மாதாங்கோவில்பட்டி, ஊராம்பட்டி, உப்புப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பின்பு பெய்த பலத்த மழையால் சிவகாசி பகுதிகளில் வெட்கை சற்று தணிந்துள்ளது. திடீர் மழையால் சிவகாசி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதே போல, மதுரையில் மூன்றாம் நாளாக தொடர்மலை பெய்தது, மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் மூன்றாவது நாளாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது, மதுரை மாவட்டத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெப்ப நிலவுகிறது. மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்கிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், திருமங்கலம் ,மேலூர், கொட்டாம்பட்டி, கீழவளவு, அழகர் கோவில், ஊர் மெச்சி குளம், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக