கோவையில் செவ்வுயிர் இரத்ததானத் திட்டம் தொடக்க விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

கோவையில் செவ்வுயிர் இரத்ததானத் திட்டம் தொடக்க விழா


கோவையில் செவ்வுயிர் இரத்ததானத் திட்டம் தொடக்க விழா


கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வுயிர் இரத்ததானத் திட்டம் தொடக்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தொடக்கவிழா கல்லூரி கலையரங்கில் 19.08.2023 (சனிக்கிழமை) இன்று நடைபெற்றது.


ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். கோவை மாநகர தெற்கு கோட்ட துணைக் காவல் ஆணையர் திரு.கே. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். விழாவினைச் சிறப்பு விருந்தினர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். 


இரத்ததானத்திற்கான பிரத்யேக செவ்வுயிர் இரத்தத்தானத் திட்டத்தினை சிறப்பு விருந்தினர் திரு.கே. சண்முகம் அவர்கள் தொடங்கி வைத்து பேசியதாவது, 


நான் காவல்துறையில் உயர் பொறுப்புகளை பெறுவதற்கு என் பள்ளி நாட்களில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் பங்காற்றியது தான் மிக முக்கிய காரணம். நாட்டு நலப்பணித்திட்டத்தில் இணைந்துள்ள மாணவர்கள் கல்லூரியில் பயிலும் காலங்களில் கல்வியோடு மற்றும் நின்று விடாமல் சமூகம் சார்ந்த சிந்தனையும் வளர்வதற்கு நாட்டு நலப்பணித்திட்டம்  உறுதுணையாக விளங்கும். இந்த பருவத்தில் அருவி நீர் போன்ற ஆற்றலும் உத்வேகமான சிந்தனையும் மேலோங்கும். மாணவர் பருவம் எளிதில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. நமது எண்ணங்கள் தடம் மாறாமல் சரியாக பயணிப்பதற்கு நாட்டு நலப்பணித்திட்டம் உதவும். குழுவாக செயல்படுதல், திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சமூக அக்கறையுடன் செயல்படுதல் ஆகியவை இங்கு வளர்வதற்கான சூழல் முழுமையாக உள்ளது. மாணவர்கள் தங்களை முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கோயம்புத்தூர் மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதில் இக்கல்லூரி முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து மாணவர்கள் சமூகத்திற்கு தங்களது சேவையை வழங்கிட வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார். 



அதைத் தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒவ்வொரு யூனிட்டுக்குமான மாணவத் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செ.பிரகதீஷ்வரன் வரவேற்றார். முடிவில் முனைவர் ஆர்.நாகராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad