இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 22 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, துணை காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன(மாவட்டகுற்றப்பிரிவு) மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் இராஜா சுந்தர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்) ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக