ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது

நெமிலி பேரூராட்சி மன்ற கூட்டம்! 
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவிசரவணன் அவர்கள் தலைமை தாங்கினார், துணை தலைவர். சந்திரசேகர் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செய்யவேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர். வெங்கடேசன், திட்டக்குழு உறுப்பினர். காஞ்சனா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/