திருநெல்வேலி, ஜன.11, நாளை(12ந்தேதி) நெல்லை மாநகராட்சி மேயர் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு. திமுக கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என திமுக தலைமை எம்எல்ஏ அப்துல் வகாப்புக்கு கண்டிப்பான உத்தரவு.
இதனால் மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படும் நெல்லை மாமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்.
பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில் வெளியூர் அழைத்து செல்லப்படும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம். மேலும் இந்த பயணத்தில் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக