கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது, இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம், மார்கழி, மாத பூசநட்சத்திர தினத்தையொட்டி ஜோதி தரிசனமாக, நேற்று புதன் இரவு 7.45 மணி முதல் சத்தியஞானசபையில், ஆறு திரைகளை நீக்கிய மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது, மழையிலும் ஏராளமான சன்மார்க்க தொண்டர்கள், அன்பர்கள், திரண்டு இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திரளான கலந்து கொண்ட பக்தர்கள், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகாமந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர், இதனை காண தமிழகத்தின் பலமாவட்டங்களில் இருந்து, ஏராளமான, சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தனர், ஜோதி தரிசனத்தை, தொடர்ந்து சபை வளாகத்தில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலப்பகுதியைச் சேர்ந்த வள்ளலார் பக்தர்கள் மற்றும் சன்மார்க்கஅன்பர்கள் மாலை மழையிலும் குவிந்த நிலையில், திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், முன் மவுன தியானமும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக