தமிழகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என அனைத்தையும் செய்வது திமுகவினர் தான் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

தமிழகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என அனைத்தையும் செய்வது திமுகவினர் தான் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு.


கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கங்கைகொண்டன் பேரூராட்சியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பேரூர் செயலாளர் மனோகர் தலைமையில் நடைபெற்றது.  அவ்வாறு நடைபெற்ற இப்பொதுகூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான அருணாச்சலம்,  கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன்,  ஸ்டாலின் ஆட்சியில், நடைபெறும் கொலை சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் என அனைத்திலும் திமுகவினர் தான் ஈடுபடுவதாகவும், கடந்த மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு,  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார். 


மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது வெட்கக்கேடான செயல் எனவும்,  பாராளுமன்ற தேர்தலின் போது,  நெய்வேலிக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த பத்து வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது,  ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று கூறிய, தற்போதைய ஸ்டாலின் அரசின் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என குற்றம் சாட்டினார். இந்நிகழ்வில் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட மாநில ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad