திருப்பாச்சேத்தியில் பேருந்தில் தவறவிட்ட மணிபர்ஸை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் எஸ்.கே.எஸ் தனியார் பேருந்தில் முனீஸ்வரன் என்பவர் தனது மணிபர்ஸை தவறவிட்ட நிலையில், வேம்பத்தூரை சேர்ந்த விஷால் கண்ணன் என்பவர் அம்மணிபர்ஸை திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் காவல் சார்பு ஆய்வாளர்கள் விஜய் ஆனந்த் மற்றும் பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் பத்திரமாக ஒப்படைத்தார். இதில் முதல் நிலைக்காவலர் பாலமுருகன் சேதுக்கரசு, மலைக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் மணிபர்ஸில் இந்திய ரூபாய் பணம், துபாய் திர்ஹாம், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்துள்ளதும், உடனடியாக மணிபர்ஸின் உரிமையாளரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர் என்பது குறும்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக