கல்லேரி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு 230 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

கல்லேரி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு 230 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்!


குடியாத்தம் ,பிப் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்2018 ம் ஆண்டு கல்லேரி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு 230 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது இந்த  இடத்திற்கு பாதை அமைத்துக் இதுவரை கொடுக்கவில்லை மேலும் நிலத்தை அளந்து கல்நெட்டு தரவில்லை இதை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில்14.2.2025 மண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலை மையில் தனி வட்டாட்சியர் அலுவலம் எதிரில்காலை 11 மணிக்கு தொடர் காத் திருப்பு போராட்டம் ஏற்பாடு செய்திருந் தனர் இந்த நிலையில் இன்று அதே நேரத்தில் ஊனமுற்றோர் முகாம் நடைபெற்றது. எனவே நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்கள் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகளிடம் பேசி இன்னொரு நாள் உங்கள் போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் ஊனமுற்றோருக்கான முகாம் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது எனவே போராட்டத்தை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்ட தற்கு இணங்க போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது எனினும் முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இரா சுப்புலட்சுமி அவர்களிடம் இந்திய குடியரசு கட்சி மண்டல செயலாளர் இராசி தலித் குமார் கோரிக்கை மனு அளித்தார் .கோரிக்கையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இரா. சுப்புலட்சுமி விரைவில் இது சம்பந்தமாக நல்ல முடிவு எடுத்து உங்களுக்கு வேண்டிய பாதை அமைத்தும் அளந்து கல் நட்டு  கொடுக் கப்படும் என உறுதி அளித்தார் உடன் மாவட்ட துணைத் தலைவர் மது மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் குசேலன் மற்றும் சரத்குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad