நெய்வேலி ஜெயப்பிரியா பள்ளி மாணவன் 498 மதிப்பெண் பெற்று தேர்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

நெய்வேலி ஜெயப்பிரியா பள்ளி மாணவன் 498 மதிப்பெண் பெற்று தேர்ச்சி.



கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகரில் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் இந்த பள்ளியில் பயின்று வரும் கூலி தொழிலாளியின் மகன் ஜசீர் அகமத் என்ற மாணவன் 500-க்கு 498-மதிப்பெண் பெற்றுள்ளான்.


மேலும் ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் 100/100 மதிபெண்கள் பெற்றுள்ளான். மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் ஊட்டியும், சால்வை கேடயம் வழங்கியும் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad