தமிழகத்தில் காலியாக உள்ள 63 ஆயிரம் சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தினார் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது மாநாடு வரவேற்பு குழு தலைவர் சுகந்தி வரவேற்றார் இதில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசியதாவது தமிழகத்தில் சத்துணவு மையங்களில் காலியாக இருக்கும் 63,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும், மிக குறைந்த ஊதியத்தில் பணி செய்யக்கூடிய சத்துணவு ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது சிறப்பு சிறப்பு காலம் வரை ஊதியம் பெரும் சத்துணவு ஊழியர்களுக்கும் காலம் வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான வரி போடுவோம் என்கின்றது அரசு
இதில் தான் உழைப்பு சுரண்டல் இருக்கிறது சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எவ்வாறு அவர் பேசினார் கூட்டத்தில் பகுதி நேர சத்துணவு பணியாளர்களை முழு நேர ஊழியர்கள் ஆக்கி கால வரைமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஓய்வூ ழியர்களுக்கு குடும்ப நிதியாக 9000 ரூபாய் வழங்க வேண்டும் ஒட்டுமொத்த பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ 10 லட்சம் சமையல்காரர்களுக்கு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் காலி பணியிடங்களில் சிறப்பு கால விடுமுறை ஊதியம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன முன்னதாக மாநில தலைவர் தமிழரசன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன் மாநாட்டை தொடங்கி வைத்தார் மாநில பொதுச் செயலாளர் மலர்விழி பொருளாளர் திலகவதி செயலாளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக