கட்டி முடித்து ஓராண்டடைக் கடந்தும் பயன்பாட்டுக்கு வராத அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

கட்டி முடித்து ஓராண்டடைக் கடந்தும் பயன்பாட்டுக்கு வராத அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை.


கடலூர், மே 30-

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா மஞ்சைக்கொல்லை பகுதியில் உள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. கட்டிடம் ஓராண்டுக்கு மேலாக தயார் நிலையில் இருந்தாலும், இது இதுவரை திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.


சுற்றியுள்ள ஏழு அல்லது எட்டு கிராமங்களில் வசிக்கும் மக்கள், சாதாரண நோய்கள் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காக இதுவரை அருகிலுள்ள நகரங்களுக்கு செல்லும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திறக்கப்படாமல் இருந்த புதிய சுகாதார நிலையம் தற்போது பயன்பாடின்றி புற்கள், கொரைகள் வளரும் நிலையிலும், பராமரிப்பின்றி அழிவடைந்த நிலைக்கும் மாறியுள்ளது.


இத்தகவலை வெளிப்படுத்திய கிராம மக்கள், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தால், அண்டை கிராம மக்களுக்கு மிகுந்த நிவாரணமாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவ சேவைகளை மக்கள் கருகில் கொண்டு வரவேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.

 
 .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad