திருநெல்வேலி - தமிழக சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு படிப்படியாக மேற்கொள்ளப்படும் - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தகவல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

திருநெல்வேலி - தமிழக சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு படிப்படியாக மேற்கொள்ளப்படும் - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தகவல்.

திருநெல்வேலி *தமிழக சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு படிப்படியாக மேற்கொள்ளப்படும் - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தகவல்*

*சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு: மூத்த குடிமக்கள் விடுதி அடிக்கல் நாட்டு விழா, கூடங்குளம் வேலைவாய்ப்பு, சட்டமன்ற நேரலை திட்டம்!*

பாளையங்கோட்டை, மே 27: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு, தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கான விடுதிகள் அமைப்பது, கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்புகள் மற்றும் சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

*சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு: படிப்படியாக அமலாக்கம்*

சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், தற்போது எந்தெந்த கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருவதாகக் கூறினார். மீதமுள்ள செயல்பாடுகளை எப்படி நேரலை செய்யலாம் என கலந்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், எந்தெந்த வார்த்தைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். படிப்படியாக நேரலை செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், அரசியல் தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உன்னிப்பாக அந்த விவகாரம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். ஏற்கனவே உள்ள அரசைப் போன்று "நாங்கள் செய்ய முடியாது" என சொல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


*மூத்த குடிமக்கள் விடுதி:*

 பாளையங்கோட்டையில் அடிக்கல் நாட்டு விழா
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் வாங்குவதற்கான விடுதி அமைக்கும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள காந்திமதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26 அறைகள் கொண்ட காப்பகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 52 முதியவர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த காப்பகத்தின் பணிகள் விரைவில் தொடங்கி அடுத்த ஆண்டுக்குள் முடிவடையும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இத்திட்டத்திற்காக முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

*தமிழக முதலமைச்சர் இரட்டை வேடம் போடுவதில்லை: சபாநாயகர் அப்பாவு கருத்து*

'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் குறித்து அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது. வேடம் போடுவது நடிகர்களுடைய செயல். பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பும் கிடையாது. மக்களுக்கு தேவையான உண்மையை அவர் செய்து கொடுத்துள்ளார்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

*கோவில் புனரமைப்பு மற்றும் திமுக அரசின் சாதனைகள்:*

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, ஓடாத தேர்களை ஓடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். திமுக குறித்து விமர்சிப்பவர்களின் பார்வையில் கோளாறு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டுவதற்கு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டபோது, நீதிமன்றம் சென்று அதனை தடை வாங்கிவிட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "எல்லோருக்கும் எல்லாம்" என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுகிறது எனவும், எந்தக் குறைபாடு இருந்தாலும் சுட்டிக்காட்டினால் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

*கூடங்குளம் வேலைவாய்ப்பு:*

 பேச்சுவார்த்தை தொடர்கிறது
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வேலை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசிய சபாநாயகர், திமுக 1996 ஆம் ஆண்டு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அணுமின் நிலைய கழக தலைவர் நேரடியாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி, சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான பணி வழங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு எழுத்து தேர்வு இல்லாமல் பலபேர் பணியிடத்தில் சேர்ந்ததாகவும், ஆனால் 2021 வரை ஒருவருக்கும் வேலை கொடுக்காமல் இருந்து வருவதாகவும் கூறினார். சி மற்றும் டி பணியிடத்திற்கு எழுத்து தேர்வு வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து போராடி தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

*சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு: படிப்படியாக அமலாக்கம்*

சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், தற்போது எந்தெந்த கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருவதாகக் கூறினார். மீதமுள்ள செயல்பாடுகளை எப்படி நேரலை செய்யலாம் என கலந்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், எந்தெந்த வார்த்தைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். படிப்படியாக நேரலை செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், அரசியல் தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உன்னிப்பாக அந்த விவகாரம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். ஏற்கனவே உள்ள அரசைப் போன்று "நாங்கள் செய்ய முடியாது" என சொல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

*சட்டமன்ற ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கல்:*

தமிழக சட்டப்பேரவை ஆரம்பித்து 104 ஆண்டுகள் ஆகி உள்ளதாகவும், 1952 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பதை ஆன்லைனில் தேடினால் எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். 1921 முதல் 1952 வரையிலான சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்றம் முடிவதற்குள் முழுமையாக அனைத்து பேச்சுகளும் ஆன்லைனில் ஏற்றப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad