ஈரோடு: லோக் அதாலத்தில் 1, 596 வழக்குகளுக்கு தீர்வு : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

ஈரோடு: லோக் அதாலத்தில் 1, 596 வழக்குகளுக்கு தீர்வு :



ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி என அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த லோக் அதாலத்தினை, சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ். சமீனா தலைமை வகித்தார்.


இதில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். எழில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த லோக் அதாலத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 6,824 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 27 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரத்து 922 ரூபாய் மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. முன்னதாக, விபத்து காப்பீடு வழக்கில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்கு 57 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையினை மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா வழங்கி, வழக்கினை முடித்து வைத்தார்.


மேலும், குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மூன்று வழக்குகளில் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணைந்தனர். இதில், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான ஸ்ரீவித்யா செய்திருந்தார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad