பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்; ஒருவர் சுட்டு பிடிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவர் போலீஸாரால் சுட்டுப்பிடிப்பு. பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு சுந்தரவேல் தப்பி ஓட முயற்சி. பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுட்டதில் சுந்தரவேல் காலில் குண்டு காயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுந்தரவேல் அனுமதி அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக