சர்வதேச யோகா தினம்
உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் 21-06-2025 ஆகிய இன்று கடைப்பிடிக்கப்பட்டது யோகா என்பது ஒருமை,கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும்.
தனிநபரின் நலனை மட்டுமின்றி சமூகத்தின் நலனையும் மேம்படுத்துகிறது என்ற விழிப்புணர்வை மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. வாழ்க வளமுடன் மனவளக்கலை மன்றம் சார்பில் உறுப்பினர்கள் வந்து யோகக்கலையை மாணவிகளுக்குக் கற்பித்தனர். மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் வினோத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக