பாமக புதிய மாவட்ட செயலாளர்கள் பெரியார் சிலை எஸ் எஸ் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு அணிகளாக தற்போது மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.
இதநிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களால் புதிய கடலூர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்ட கோபிநாத், வடக்குத்து ஜெகன் ஆகியோர் கடலூர் பாரதி சாலையில் உள்ள பெரியார் சிலை மற்றும் கடற்கரை சாலையில் உள்ள எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக