காட்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி!
காட்பாடி , ஜூன் 11 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு ஹன்ஸ்தா இவர் தன்பாத்திலி ருந்து ஆலப்புழா வரை செல்லும் பயணி கள் விரைவு ரயிலில் நண்பர்களுடன் கோயம்புத்தூருக்குப் பணிக்குச்சென்று கொண்டிருந்தார். அப்போது காட்பாடி அருகிலுள்ள சேவூர் அருகே நேற்று
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக