
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கிராமத்திலிருந்து அடுக்கம் வரை செல்லும் சாலை அமைக்கப்படாததை எதிர்த்து, நேற்று (ஜூலை 21) கண்டாச்சிபுரம் வரை நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல வருடங்களாக குறித்த சாலை அமைக்கப்படாமல் இருப்பதால், தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்கின்ற பொதுமக்கள், மருத்துவ அவசர நிலைகளில் சிக்கும் மூப்பர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் சாலையே இல்லாத நிலை உருவாகுவதால், சில நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் கட்டாயத்திலும், நோயாளிகள் சிக்கி விபத்துகள் ஏற்படும் நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சனையை கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் அளித்தும், தீர்வு காணப்படவில்லை எனவும், இதற்காகதான் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியினரின் முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அவதானித்து உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
- செய்தியாளர் அருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக