புவனகிரி அருகே ஒரத்தூரில் அதிமுகவினர் துண்டு பிரசுரம் கொடுத்து திண்ணைப் பிரச்சாரம் செய்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

புவனகிரி அருகே ஒரத்தூரில் அதிமுகவினர் துண்டு பிரசுரம் கொடுத்து திண்ணைப் பிரச்சாரம் செய்தனர்.



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஒர்த்தூர் பகுதியில் அதிமுகவினர் சாதனை விளக்கத்துண்டு பிரசுரம் வழங்குதல் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் பங்கேற்று பொதுமக்கள், வணிகர்கள், குடியிருப்பு வாசிகள் என அனைவரிடத்திலும் அதிமுக சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கி கடந்த நான்காண்டுகளாக திமுக அரசின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்களையும் எடுத்துக் கூறி திண்ணைப் பிரச்சாரம் மற்றும் சாதனை விளக்கத்துடன் துண்டு பிரசுரம் வழங்குதலும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கு ஒன்றியச் செயலாளர் கருப்பன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad