நெய்வேலியில் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

நெய்வேலியில் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 27 அண்ணா சாலையில் உள்ள என்.எல்.சி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயபால் மகன் ஜெகன் 35 இவர் என்எல்சி பீல்ட் ஆபீசில் டிசியாக பணிபுரிந்து வருகிறார்  கணவன் மனைவி இருவரும் திருமண  நிகழ்ச்சிக்காக ஜவுளி எடுப்பதற்கு சேலம் சென்றுள்ளனர் பின்னர் இருவரும் நேற்று நள்ளிரவில் வீடு திரும்பினார்.


அப்போது வீட்டில் முன்பக்க கதவு திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்ததால் இருவரும் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 25 தங்க நகை திருடு போனது தெரியவந்தது மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது இது குறித்து ஜெகன் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர்  நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்எல்சி குடியிருப்பில் வீடுகளை உடைத்து 25 பவுன் தங்க நகை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad