ராதாபுரம் வெளிநாட்டு தம்பதியினர் சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

ராதாபுரம் வெளிநாட்டு தம்பதியினர் சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

ராதாபுரம் வெளிநாட்டு தம்பதியினர் சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் ஊரைச் சேர்ந்த கனகசுப்பிரமணியன் இந்து தம்பதியினர் தற்போது ஓமன் நாட்டில் நிஸ்வா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார் இவர்களுக்கு விஷ்வாசாய் 9 வித்தியாசாய் 6 இரண்டு குழந்தைகளும் நிஸ்வா இந்திய பள்ளியில் படித்து வருகின்றனர் 

அபுதாபியில் வசித்து வரும் எழுத்தாளர் துறை ஆனந்த் குமார் என்பவர் வெளிநாட்டில் வசித்து தமிழ் குழந்தைகள் தமிழ் பேசுதல் எழுதுதல் உள்ளிட்ட திறமைகளை கண்டறிந்து ஆன்லைன் மூலமாக கேட்டரிந்து அச்சு வடிவில் புத்தகம் வெளிட்டுவருகிறார் தற்போது அவர் சென்னை பாரதி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட மேஜிக் மின் என்கின்ற புத்தகத்தில் இவர்களது குழந்தைகள் எழுதிய கட்டுரைகள் இளம் வயதில் கதை தெரிந்து அச்சு வடிவில் தங்களை திறமை வெளிப்படுத்திய குழந்தைகள் தமிழ்நாடு சட்டப் பேரவைதலைவர் அப்பாவு அவர்களை தனது குடும்பத்துடன் வந்து சந்தித்து விவரங்களை தெரிவித்து புத்தகத்தை காண்பித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றனர் 

 ஏற்கனவே சிறுவன் விஷ்வா சாய் ஓமன் நாட்டில் 1.1 கிலோ மீட்டர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி உலகில் சிறிய வயதில் அதிக தூரம் சைக்கிள் ஓட்டி உலக சாதனை பெற்று ஓமன் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி ஆலோசகர் அவரிடம் இருந்து விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad