குடியாத்தத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு!
குடியாத்தம் ,ஜூலை 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் உள்வட்டம் சிங்கல்பாடி கிராமம் சிங்கல்பாடி கேட் முகவரியை சேர்ந்த திரு.விநாயகம் த/பெ பிச்சாண்டி வயது (சுமார் 45) 13.07.2025 சுமார் 7 மணி அளவில் உள்ளி to குடியாத்தம் ரோட்டில் பார்வதியாபுரம் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் மோதி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.இறந்த நபர் கட்டிட வேலை செய்து வந்தார் என கிராம விசாரணையில் தெரிய வருகிறது இறந்த நபரின் உடலானது பிரேத பரிசோ தனைக் காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டனர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக