நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பில், பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை, நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் தலைவர் திரு. ஜாஃபர் மற்றும் பெத்லகேம் பள்ளியின் தாளாளர் அவர்கள் துவக்கி வைத்தனர். மாணவிகளுக்கு மரங்களின் முக்கியத்துவம் மற்றும் மரங்களை வளர்ப்பது தொடர்பாக பயனுள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. விழாவில், நீலிகிரி எஜூகேஷனல் டிரஸ்ட் சார்பாக திருமதி தில்ஷத் மற்றும் திருமதி ஜெனிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் ராஜேஷ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக