இந்நிகழ்வில் சங்க தலைவர் G.எட்வர்ட் கண்ணப்பா கொடியேற்றினார். பின்னர் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் G.எட்வர்ட் கண்ணப்பா பொது செயலாளர் இராவி.அசுபதிசந்திரன் பொருளாளர் M.ஜெயக்குமார் துணை தலைவர் E.ஞானையா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தினசரி திருநெல்வேலி to திருச்செந்தூர் மார்க்கத்தில் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் கூட்டம் அதிகமாக இருப்பதால் வியாபாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் நிற்பதுக்கு கூட சிரமபடுகிறார்கள் ஆகையால் கூடுதல் பெட்டிகள் இணைக்கும் படி தென்னக ரயில்வே துறையிடம் கோரிக்கை மனு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக