ராதாபுரம் - வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

ராதாபுரம் - வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது.

வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது
 
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, சங்கநேரி ஊரை சேர்ந்தவர் 28 வயதான பிரபுதாஸ் என்பவர் கூடங்குளத்தில் ஒரு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது இரு சக்கர வாகனத்தில் கோலியன் குளம் ஊர் அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 
விபத்து என்று ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேற்படி வழக்கில் ராதாபுரம் காவல் துறையினர் தீவிரமாக துப்பு துலக்கி நான்கு நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் கோலியான் குளம் அருகே வாலிபர் மீது சொகுசு காரை மோத வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கொலை வழக்கில் சிவசுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த வினோத், லிங்குசாமி, மகாராஜன், திசையன் விளையை சேர்ந்த அருண்குமார் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை குறித்து காவல் துறையினர் கொலையாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad