ஜெயசூர்யா ஆணவக் கொலை சந்தேகம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஜெயசூர்யா ஆணவக் கொலை சந்தேகம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த அரசகுழி பகுதியை சேர்ந்த முருகனின் மகன் ஜெயசூர்யா (B.Com, I ஆண்டு மாணவர்) ஒரு மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தக் காதலை எட்டிப்பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், ஜெயசூர்யாவை திட்டியும், தாக்கியும் இருப்பதாகவும், தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பின்னர், கடந்த மே 18-ஆம் தேதி, ஜெயசூர்யா, அவரது நண்பர்கள் பிரவீன் (அரசகுழி பகுதி) மற்றும் ஜீவன் (புதுகூரைபேட்டை) ஆகியோருடன் பாண்டிச்சேரிக்கு புது துணி வாங்க சென்று திரும்பியபோது, தோப்புக்கொல்லை பகுதியில் மழையினால் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.


இந்த விபத்தில் இருந்த பிரவீன் மற்றும் ஜீவன் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும், மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஜெயசூர்யாவின் தந்தை முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயசூர்யாவின் இறப்பு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கும் வழிகாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad