குடியாத்தம் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
குடியாத்தம் , செப் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 9 வது. வார்டு திருஞானசம்பந்தர் தெரு பக்கிரி முகமது தெரு ஆகிய பகுதிகளில் சுமார் .100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள சுமார் 11 அடி அகலம் கொண்ட ஏரி கால்வாயில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கழிவுநீர் மற்றும் மனித கழிவுகள் சாலையில் செல்கிறது இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் பெரும் துர்நாற்றம் வீசுகிறது
நேற்று இரவு பெய்த மழையால் பெரும் வெள்ளம் சாலையில் சென்றது இது குறித்து கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு வகைகள் கோரிக்கை மனுகள் கொடுத்து வருகின்றார்கள்
இருப்பினும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள் நகராட்சி நிர்வாகம் நீர்நிலை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அப்புறப் படுத்த வேண்டும் என கோரிக்கை
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக