ஆழ்வார்திருநகரி. செப் 21. ஆழ்வார்திருநகரி தெற்கு மாடவீதியில் ரெங்கநாதர் சன்னதி உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 10 மணிக்கு நவகலச திருமஞ்சனம்.
11 மணிக்கு தீபாராதனை. 11.30 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவை.12.30 மணிக்கு சாத்து முறை கோஷ்டி. பின்னர் தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. உற்சவர் ரெங்கநாதர் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 7.30 அளவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கோவிலின் உள் பிரகாரத்தில் கருட வாகனத்தில் உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் பெருமன்றத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக