கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்திற்கான 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்திற்கான 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள்‌ ஜீலை 24-ஆம்‌ தேதி தொடங்கப்பட்டு 2 கட்டங்களாக
நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்‌ மொத்தமுள்ள 766 நியாயவிலை கடைகளில்‌ 4,34,663 குடும்ப அட்டைகள்‌ உள்ளன. இதில்‌, முதற்கட்டமாக 580 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 2,75,356 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜிலை 24 முதல்‌ ஆகஸ்ட்‌ 4 வரை நடைபெற்ற முகாம்களில்‌ 80% விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, இரண்டாம்‌ கட்டமாக கள்ளக்குறிச்சி வட்டத்தில்‌ 41 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 36,166 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்களும்‌, சின்னசேலம்‌ வட்டத்தில்‌ 39 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 31,478 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்களும்‌, சங்கராபுரம்‌ வட்டத்தில்‌ 52 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 46,690 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்களும்‌, கல்வராயன்மலை வட்டத்தில்‌ 11 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 6,901 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்களும்‌, உளுந்தூர்பேட்டை வட்டத்தில்‌ 18 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 16,787 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்களும்‌, திருக்கோவிலூர்‌ வட்டத்தில்‌ 25 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 21,285 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்களும்‌ ஆக மொத்தம்‌ 186 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 1,59,307 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட்‌ 5-ஆம்‌ தேதி முதல்‌ 16-ஆம்‌ தேதி வரை விண்ணப்பங்கள்‌ பெறும்‌ முகாம்கள்‌ நடைபெற்று வருகிறது.


இந்த திட்டம்‌ தொடர்பான விவரங்கள்‌, புகார்கள்‌ இருந்தால்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04151 - 228801 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்‌. இது தவிர, அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ கட்டுப்பாட்டு அறைகள்‌ அமைக்கப்பட்டுள்ளன.


கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு 04151 - 222449 என்ற எண்ணிலும்‌, கல்வராயன்மலை வட்டத்திற்கு 04151 - 242243 என்ற எண்ணிலும்‌, சின்னசேலம்‌ வட்டத்திற்கு 04151 -257400 என்ற எண்ணிலும்‌, சங்கராபுரம்‌ வட்டத்திற்கு 04151 - 235329 என்ற எண்ணிலும்‌, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு 04149 - 222255 என்ற எண்ணிலும்‌, திருக்கோவிலூர்‌ வட்டத்திற்கு 04153 - 252316 என்ற எண்ணிலும்‌ வட்டாட்சியர்‌ அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் - க.சமியுல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad