போதிய இட வசதி இல்லாததால் நெடுஞ்சாலையோரம் நடைபெறும் கோழி சந்தையால் விபத்து ஏற்படும் அபாயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

போதிய இட வசதி இல்லாததால் நெடுஞ்சாலையோரம் நடைபெறும் கோழி சந்தையால் விபத்து ஏற்படும் அபாயம்

போதிய இட வசதி இல்லாததால் நெடுஞ்சாலையோரம் நடைபெறும் கோழி சந்தையால் விபத்து ஏற்படும் அபாயம் வடலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை 


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் சனிக்கிழமைகள் தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு வடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நெய்வேலி குறிஞ்சிப்பாடி, கடலூர் மந்தாரக்குப்பம், விருதாச்சலம் ஸ்ரீமுஷ்ணம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கமாக உள்ளது 
இந்நிலையில்  போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தங்கள் வளர்த்து வரும் கால்நடைகளான கோழி ,புறா முயல் உள்ளிட்ட வகைகளை சாலையோரம் நின்று விற்பனை செய்து வருகின்றனர் இதனால் வடலூர் கடலூர் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது 
வியாபாரிகள் வாகனங்களை பொறுப்பெடுத்தாமல் சாலையை கடந்து வருவதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது எனவே வடலூர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad